close
Choose your channels

கர்ப்பப்பையில் 10 செமீ கட்டி.. விவாகரத்தான கணவரின் உதவியால் உயிர் பிழைத்த பிரபல நடிகை..!

Tuesday, May 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகைக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டி இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரது முதல் கணவரின் உதவியால் சிகிச்சை பெற்று தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு ரித்தேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரை 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு அவர் 2022 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்த நிலையில் இரண்டாவது கணவரையும் அவர் பிரிந்து விட்டார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ராக்கி சாவந்த்துக்கு திடீரென வயிற்று வலி வந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அவரது முதல் கணவர் ரித்தேஷ் சிங் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது அவரது கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகவும் அது அனேகமாக புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்

இதனை அடுத்து முதல் கணவர் ரித்தேஷ் சிங் உதவியால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக ராக்கி சாவந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததற்கு நன்றி என்றும் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆபரேஷன் தியேட்டருக்கு நுழைவதற்கு முன்பு ரித்தேஷ் சிங் எடுத்த வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் தனக்கு அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் சில நாட்கள் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் நடிக்க வருவேன் என்றும் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.