close
Choose your channels

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மீது பிரபல இயக்குனர் புகார்!

Thursday, January 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது பிரபல இயக்குனர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் ’ஏக் ஹசினா ஏக் தீவானா தா’. இந்த படத்தை சுனில் தர்ஷன் என்பவர் இயக்கி தயாரித்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் காப்புரிமையை அவர் யாருக்கும் இதுவரை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக யூடியூப் தளத்தில் மர்மநபர்கள் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் யூட்யூபில் இந்த படத்தை இலட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கூகுள் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுனில் தர்ஷன் மும்பை காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். காப்புரிமை சட்டத்தை மீறியதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீதும் மற்றும் சிலர் மீது அவர் புகார் அளித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.