close
Choose your channels

ரூ.119 கோடிக்கு அபார்ட்மெண்ட் வீடு வாங்கிய நட்சத்திர ஜோடி: எங்கே தெரியுமா?

Monday, July 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலகின் பிரபல நட்சத்திர ஜோடி ரூ.119 கோடிக்கு மும்பையில் அபார்ட்மெண்ட் வீடு வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி சமீபத்தில் மும்பையின் மையப்பகுதியான பாந்த்ராவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ரூ.119 கோடிக்கு நான்கு தளங்களை கொண்ட அபார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'lush residential tower' இந்த கட்டிடத்தின் 16, 17,18 மற்றும் 19 மாடிகளை ஒன்றிணைத்து இந்த குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குடியிருப்பின் மொத்த சதுரடி 11,266 என்றும் கூறப்படுகிறது. ஒரு சதுர அடி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த அபார்ட்மென்டின் பதிவு கட்டணம் மற்றும் ரூ.7.13 கோடி என்றும் கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே - ரன்வீர் வாங்கிய அபார்ட்மென்ட்டின் அருகில்தான் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானின் அப்பார்ட்மெண்ட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.