'வலிமை' படத்தின் இரண்டாம் பாகமா? போனிகபூர் தகவல்!

அஜித் நடித்த 'வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே இந்த படத்தை பார்த்த பாலிவுட் பிரமுகர் ஒருவர் ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ மற்றும் ’மிஷன் இம்பாசிபிள்’ படங்களுக்கு இணையானது என்று கூறியுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது.

இந்த நிலையில் 'வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் இந்த படம் குறித்து சமீபத்தில் கூறியபோது, இந்த படம் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான ரேஸ் படம் மட்டுமின்றி, இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும், சீட் நுனியில் ரசிகர்களை உட்கார வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றும் இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக மட்டுமின்றி அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் அளவுக்கு இந்த படத்தின் கதை அமைந்துள்ளது என்றும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வரும் 'வலிமை’ படத்தின் இரண்டாம் பாகம் உள்பட அடுத்தடுத்த பாகங்களுக்கும் வாய்ப்பு இருப்பதால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பீஸ்ட்' ரிலீஸ் தேதி மாறுகிறதா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும்

சென்னையில் 'சர்தார்'  படப்பிடிப்பு: நாயகி பகிர்ந்த மாஸ் புகைப்படம்!

நடிகர் கார்த்தி நடித்து வரும் 'சர்தார்'  படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் படத்திற்கு பதிலடி தான் 'வலிமை': படம் பார்த்த பிரபலத்தின் பதிவு!

ஹாலிவுட்டில் உருவான 'ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' மற்றும் 'மிஷின் இம்பாசிபிள்' ஆகிய படங்களுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய திரைப்படம் தான் 'வலிமை' என இந்த படத்தை பார்த்த பிரபலம் ஒருவர்

மும்பை ரெட்லைட் ஏரியாவுக்கு சென்ற பிரபல நடிகை: என்ன காரணம்?

பிரபல நடிகை ஒருவர் மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று வந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் பிக்பாஸ் அக்சரா?

அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் பிக்பாஸ் அக்சரா சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.