பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,January 16 2017]

கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன இளையதளபதி விஜய்யின் சென்னை வார இறுதி வசூல் குறித்த நிலவரங்களை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் பொங்கல் திருநாளில் வெளியான பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர் நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் வார இறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளை 'பைரவா' பிடித்து கொண்ட போதிலும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் சென்னையில் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் 13 திரையரங்க வளாகங்களில் 52 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.12,49,960 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர்.

இன்றும் நாளையும் அரசு விடுமுறை நாள் என்பதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யா ரசிகர்களுக்கு நாளை இன்ப அதிர்ச்சி

நாளை சூர்யா திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியின்போது இந்த படத்தின் புதிய டீசர் மற்றும் முக்கிய காட்சிகளின் க்ளிப்பிங்ஸ் ஆகியவற்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த 'காதலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊர்வசி ஊர்வசி' பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலுக்கான வரிகளை அவரது ரசிகர்கள் அனுப்பி வந்தனர் என்பதும் தெரிந்ததே...

ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தா? சரத்குமார் விளக்கம்

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் சரத்குமார் மீது சமூக வலைத்தள பயனாளிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு சரத்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது...

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எந்தவித திரையுலக பின்னணியும் இன்றி தானாகவே சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் பிசியான நாயகர்களில் ஒருவராக இருந்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்...

நான் பிறப்பால் தமிழச்சி என்பதில் பெருமை அடைகிறேன். த்ரிஷாவின் உணர்ச்சிமிகு கடிதம்

கடந்த சில நாட்களாக நடிகை த்ரிஷாவுக்கு எதிராக சமூக வலைத்தள பயனாளிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வந்தனர். த்ரிஷாவின் சமூக வலைத்தள பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டு அதில் த்ரிஷா கூறாத கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன...