close
Choose your channels

ஆட்டோவில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்- 6 பேர் கைது!

Friday, February 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹைத்ராபாத்தில் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவி ஒருவரை பயணம் செய்த ஆட்டோ டிரைவரே கடத்திச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட கல்லூரி மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹைத்ராபாத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். கல்லூரி வாகனத்தில் பயணம் செய்த அவர் முக்கியச் சாலையான நாகாராம் சௌராஷ்டிரா பகுதியில் இறங்கி உள்ளார். பின்னர் அங்கிருந்து தன் வீடு இருக்கும் பகுதியான ஆ.எல் நகருக்கு செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறி இருக்கிறார். இவர் ஏறும்போது ஒரு பெண் உட்பட 2 பேர் ஆட்டோவில் இருந்துள்ளனர். செல்லும் வழியில் அப்பெண் இறங்கி கொண்டுள்ளார். பின்னர் ஒரு வாலிபர் மற்றும் ஆட்டோ டிரைவருன் பயணம் செய்த கல்லூரி மாணவி, தான் இறங்க வேண்டிய இடம் வந்தும் ஆட்டோ நிற்காமல் வேகமாகச் செல்வதைப் பார்த்து பதறி இருக்கிறார்.

இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோருக்கு தொலைபேசி மூலம் மாணவி தெரிவித்து உள்ளார். அதே சமயத்தில் மாணவியைக் கடத்திச் சென்ற டிரைவர் தனது நண்பர்களுக்கு இத்தகவலை கூறி இருக்கிறார். இதனால் ஒரு காரில் வந்த டிரைவரின் நண்பர்கள் மாணவியை கடத்திச் சென்று உள்ளனர். இதற்கிடையே மாணவியின் பெற்றோர், உறவினர்கள் எனப் பலரும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் மாணவியின் செல்போன் டிராக் செய்யப்பட்டு அவரைத் தேடும் பணி தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் மாணவியை காரில் கடத்திச் சென்ற டிரைவர் உட்பட அவரின் நண்பர்கள் 6 பேர் சேர்த்து மாணவியைத் தாக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த போலீசார் மாணவி மயங்கி கிடந்ததைப் பார்த்து அவரை மருத்துவ மனையில் அனுமதித்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் ராஜு கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆட்டோ டிரைவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் அனைவரையும் தனிப்படை அமைத்து ஹைத்ராபாத் போலீசார் கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் ஹைத்ராபாத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.