close
Choose your channels

'எதற்கும் துணிந்தவன்' கெட்டப்பில் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை: ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

Sunday, March 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் முருகன் கெட்டப்பில் நடிக்க சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை என ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு கூறியுள்ளார் .

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எதற்கும் துணிந்தவன்’  சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் 'உள்ளம் உருகுதய்யா’ என்ற பாடலில் சூர்யா முருகன் கெட்டப்பில் தோன்றுவார். இந்த குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவாகி வருகிறது என்பதுவும் ஒரு சில அமைப்புகள் இந்த கெட்டப்பிற்கும் பாடலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘முருகன் கெட்டப் போட  சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை என்றும் இருப்பினும் படத்தின் கதைக்கு முருகன் வேடத்தில் ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கூறியதை ஏற்று கொண்ட சூர்யா, அந்த கெட்டப்பில் நடித்தார் என்றும் சூர்யாவை தவிர வேற எந்த நடிகராக இருந்தாலும் அந்த வேடம் போட்டு இருக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

மேலும் முருகன் வேடத்தை போட்டு சூர்யா மிகவும் நன்றாக நடித்து இருந்தார் என்றும் ரசிகர்களுக்கு அது பிடித்து இருந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.