மருத்துவத் துறையில் ஒரு மைல்கல் சாதனை… புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு!

உயிர்க்கொல்லி நோயாகக் கருதப்படும் புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதாக அமெரிக்க விஞ்ஞானிகள் புது தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தல் நோயாகக் கருதப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். இதைத்தவிர கீமோதெரபி, கதிர்வீச்சு அறுவைசிகிச்சை என்று இந்நோயால் மக்கள் கடும் அவதியுற்று வரும் நிலையில் அமெரிக்காவின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் சென்டர் எனும் ஆராய்ச்சி கூடத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தற்போது நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்வினை கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் 18 நோயாளிகளுக்கு தொடர்ந்து 6 மாதங்கள் டோஸ்டார்லிமாப் எனும் மருந்து கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் முடிவில் அவர்களின் உடல்களில் புற்றுநோயக்கான செல்கள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும் மேலும் புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் புதிதாகத் தோன்றியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்டுள்ள டோஸ்டார்லிமாப் எனும் மருந்தை 3 வார இடைவெளியில் தொடர்ந்து 6 மாதங்கள் உட்கொள்வதால் புற்றுநோய்க்கான அறிகுறியே நோயாளிகளின் உடலில் இருந்து மறைவதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். மருத்துவத் துறையில் புது நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆய்வு குறித்துப் பேசியுள்ள விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இனி பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

More News

வீட்டில் யானை தந்தங்கள்… பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஏற்பட்ட புது நெருக்கடி!

பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்': ஃபர்ஸ்ட்லுக் டிரெண்டே முடியாத நிலையில் செகண்ட்லுக்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் 'பிரின்ஸ்' என்று வைக்கப்பட்டுள்ள

அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆகும் யாஷிகாவின் இரண்டு படங்கள்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் நடித்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டன.

நேற்று திருமணம், இன்று அதிகாலை கணவருடன் நயன்தாரா பயணம்: எங்கே தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவனை நேற்று நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை

டி.இமான் இசையில் பாட்டு பாடிய யுவன்: எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் இசையில் மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.