close
Choose your channels

நேற்று திருமணம், இன்று அதிகாலை கணவருடன் நயன்தாரா பயணம்: எங்கே தெரியுமா?

Friday, June 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவனை நேற்று நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துக்களைளுக்கு தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.

பிரம்மாண்டமாக சிவாச்சாரியார்கள் ஆசியுடன் நடந்த இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வந்தன. இந்த நிலையில் நேற்று காலை திருமணம் நடந்த அதே இடத்தில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திருமணம் முடித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகள் இன்று அதிகாலை திருப்பதி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு ஏழுமலையானை தரிசிக்க விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகள் திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தத் திருமணம் திருப்பதியில் தான் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது என்பதும் ஆனால் அதன் பின்னர் ஒருசில காரணங்களால் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.