வானத்தில் ஒய்யாரமாக பறக்கும் கார் … அசத்தும் புது கண்டுபிடிப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,October 31 2020]

 

சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கார் வெறுமனே 3 நிமிடத்தில் வானத்தில் பறக்கக்கூடிய ஏர் விமானமாக மாறமுடியும். அப்படி ஒரு ஏர் காரை ஸ்லோவாக்கியாவில் உள்ள ஸ்டீபன் கிளீன் எனும் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதற்கு முன்பாக வானத்தில் பறக்கும் சில ஏர் கார்கள் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதைவிட அதிக தூரம் பயணிக்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வடிவமைக்கத் தொடங்கப்பட்ட இந்த இயந்திரம் தற்போது வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஸ்லோவாக்கியாவின் பியஸ்டனி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட இந்த கார் 1500 அடி உயரத்தில் பறந்து வெற்றிகரமாக தனது சோதனையை முடித்துக் கொண்டது. மனிதக் கண்டுபிடிப்பின் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த இந்த விமானக் கார் எதிர்காலத்தில் சுயமாக இயக்கும் வகையிலும் அதே நேரத்தில் தனிநபர் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலும் கொண்டு வரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் மற்ற எர் கார்களைப்போல இல்லாமல் இந்த விமானம் 1500 அடி உயரம் வரையிலும் பறக்கக் கூடியது. 1,100 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தில் 2 இருக்கைகள் பொருத்தப் பட்டுள்ளன. அதேபோல இந்த விமானத்தில் 200 கிலோ எடைக் கொண்ட பொருளையும் ஏற்றிச் செல்ல முடியும்.

பேராசிரியர் ஸ்டீபன் கிளீன் என்பவர் இந்த ஐந்தாவது தலைமுறை பறக்கும் கார் விமானத்தை உருவாக்கி இருககிறார். மேலும் இது மிகக் குறைந்த தூரத்தில் உள்ள ஓடுதளத்தில் இருந்தும் இயக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிஎம்டபிள்யூ 1.6 எல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் இந்தக் கார் விமானம் 140 ஹெச்பி திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 1000 கி.மீ துரம் வரை இந்த கார் விமானத்தில் பயணிக்க முடியும்.

More News

ஐபிஎல் 2020: 50 போட்டிகள் முடிந்தும் உறுதி செய்யப்படாத பிளே ஆப் அணிகள்!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாக தொடங்கினாலும் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தப்பிக்கும் ஐவர் யார் யார்? அதிக ஓட்டுக்கள் இவர்களுக்குதான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே நாமினேஷன் செய்யப்பட்ட 11 பேர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

வேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: சொன்னபடி தற்கொலை செய்த வங்கி அதிகாரி!

பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தனக்கு வேலை கிடைத்தால் தனது உயிரையே காணிக்கையாக தருவதாக நேர்த்திக்கடன் நேர்ந்ததாகவும்

லட்சுமி பாம்: புதிய டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்த ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகிய 'லட்சுமி பாம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசுக்கு தயாரான நிலையில், இந்த படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை

குருப்பிஸம், ஃபேவரிஸம்: அர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த ஆரி

நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் சரியாக பெர்பாமன்ஸ் செய்யாத மோசமான போட்டியாளர்களாக அனிதா மற்றும் ஆரி தேர்வு செய்யப்பட்டனர்