முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை கொடுத்த புகாரில் திடீர் திருப்பம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,July 09 2022]

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி என்பவர் பாலியல் புகார் கொடுத்த நிலையில் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ’நாடோடிகள்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும் இதன் காரணமாக கர்ப்பமாக இருந்த நிலையில் வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைக்க வைத்ததாகவும் தன்னை திருமணம் செய்ய மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதன் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் சாந்தினி என்ற பெண் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் திடீரென ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்து காண்பித்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்த புகாரை நடிகை சாந்தினி திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் இதனையடுத்து மணிகண்டன் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கையை பிடித்து வாழ்த்திய ரஜினி, கட்டிப்பிடித்து வாழ்த்திய ஷாருக்கான்: வைரலாகும் நயன் திருமணம் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் சென்னை அருகே நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார்

'பொன்னியின் செல்வனை கடுமையாக விமர்சித்த பிரபல எழுத்தாளர்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலானது என்பது தெரிந்ததே. 

லிப்ரா புரடொக்சன்ஸ் அடுத்த படத்திற்கு பாக்யராஜின் சூப்பர்ஹிட் பட டைட்டில்!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லிப்ரா புரொடக்ஷன் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

உடைந்த காலுடன் நித்யா மேனனின் அர்ப்பணிப்பு!

உடைந்த காலுடன் நடிகை நித்யாமேனன் அர்ப்பணிப்பு உணர்வுடன் தான் நடிக்கும் வெப்தொடர் ஒன்றின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

'பொன்னியின் செல்வன்' படத்தில் கமல்ஹாசனும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி