close
Choose your channels

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை கொடுத்த புகாரில் திடீர் திருப்பம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Saturday, July 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி என்பவர் பாலியல் புகார் கொடுத்த நிலையில் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ’நாடோடிகள்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும் இதன் காரணமாக கர்ப்பமாக இருந்த நிலையில் வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைக்க வைத்ததாகவும் தன்னை திருமணம் செய்ய மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதன் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் சாந்தினி என்ற பெண் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் திடீரென ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்து காண்பித்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்த புகாரை நடிகை சாந்தினி திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் இதனையடுத்து மணிகண்டன் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.