நாச்சியார் பட விவகாரம்: ஜோதிகா, பாலா மீது நீதிமன்றத்தில் வழக்கு

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் இந்த டீசரின் முடிவில் ஜோதிகா பேசும் ஒரே ஒரு வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வார்த்தைக்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஜோதிகா, பாலாவுக்கு எதிராக தங்களது கண்டனங்களையும் பதிவு செய்தனர். இந்த நிலையில் ஜோதிகா மீதும், இயக்குனர் பாலா மீதும் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கால் 'நாச்சியார்' படத்திற்கு தடை ஏற்படுமா? அல்லது இலவச விளம்பரம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

திருமணத்திற்கு பின்னர் நமீதா நடிப்பாரா? கணவர் வீரா பதில்

நடிகை நமீதா-வீரா திருமணம் இன்று காலை திருப்பதில் சிறப்பாக நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் திரையுலகினர் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

தேர்தல் நேரத்தில் கலக்க வரும் விஷ்ணு மஞ்சுவின் 'குறள் 388'

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கும் 'குறள் 388' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் அவருடைய பிறந்த நாளில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது

கார்த்திக் சுப்புராஜூடன் 2வது முறையாக இணையும் தனுஷ்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த பெரிய பட்ஜெட் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

கரு.பழனியப்பனின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை

இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கும் அடுத்த படமான 'புகழேந்தி என்னும் நான்' என்ற அரசியல் த்ரில்லர் படத்தின் நாயகனாக அருள்நிதி நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

நேற்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பெயர், கொடி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.