close
Choose your channels

ஓடிடி படங்களுக்கும் சென்சார் அவசியம்: கமல், ரஜினி பட நடிகை கருத்து!

Friday, January 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓடிடி படங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகள் இடம் பெறுவதால் ஓடிடி படங்களுக்கும் சென்சார் தேவை என கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.

கௌதமி நடித்த ’ஸ்டோரி ஆப் திங்க்ஸ்’ என்ற வெப்தொடர் இன்று வெளியாகிறது. இந்த தொடரில் பரத், அதிதி பாலன், சாந்தனு, அர்ச்சனா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த தொடரில் நடிப்பது குறித்து கௌதமி பேசியபோது ’சினிமா, ஓடிடி என எதுவாக இருந்தாலும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். ’ஸ்டோரி ஆப் திங்க்ஸ்’ தொடரில் எனது கேரக்டர் பேசப்படும் வகையில் இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓடிடியில் தற்போது நல்ல படங்கள் வெளிவந்தாலும் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை இல்லை என்றும் அதனால் வரம்பு மீறிய காட்சிகள் வசனங்கள் இடம்பெறுவது சர்ச்சையை கிளப்பி உள்ளது என்றும் எனவே ஓடிடியில் படங்களுக்கும் சென்சார் கொண்டுவர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை கௌதமி சென்சார் உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.