மே 3 வரையிலான ஊரடங்கின் வழிகாட்டுதல் நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது தெரிவித்தார். இந்த நிலையில் இந்த 2ம் கட்ட ஊரடங்கு குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன் விபரங்கள் பின்வருமாறு:

* வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

* கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி

* வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி

* அனைத்து கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து சேவைகள் இயங்க தடை

* அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி

* ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம். ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

* ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி

* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்

* ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி

* ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்

இவ்வாறு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு குறித்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

More News

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாராக இருந்தது.

முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல தொலைக்காட்சி நடிகை விவாகரத்து!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கசப்பு மருந்தாக இருந்தாலும் ஊரடங்கை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்: பிரபல நடிகர்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

பால்கனி அரசாங்கம்: மோடி அரசை விமர்சனம் செய்த கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் இந்தியாவிலும் தொடங்கிய நாள் முதலே மத்திய, மாநில அரசுகளை தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் கமல்ஹாசன்