close
Choose your channels

பிரபல தொலைக்காட்சி நடிகை விவாகரத்து!

Wednesday, April 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Yeh Rishta Kya Kehlata Hai என்ற தொடர் மூலம் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற சிம்ரன் கன்னா கடந்த சில ஆண்டுகளாக கணவர் பரத் அவர்களிடமிருந்து பிரிந்து இருந்த நிலையில் தற்போது இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த தம்பதியின் மகன் வீனித், தந்தை பரத்துடன் இருப்பார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த விவாகரத்து குறித்து பேட்டி ஒன்றில் கூறிய நடிகை சிம்ரன் கன்னா, ‘ஆம் எனது கணவர் பரத்துடன் நான் விவாகரத்து பெற்று உள்ளேன். எங்கள் இருவருக்கும் பெரிதாக எந்த பகையும் இல்லை. இருப்பினும் எங்கள் இருவருக்கும் ஒரு சில விஷயங்களில் ஒத்துவரவில்லை. எனது மகன் வினீத் தற்போது பரத்துடன் தான் இருப்பார் இருப்பினும் நான் வினித்தை அவ்வப்போது பார்க்க எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம்தான் தனது மகன் வினித் கன்னா பிறந்தநாளை மிக சிறப்பாக நடிகை சிம்ரன் கன்னா கொண்டாடினார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.