close
Choose your channels

விஜய்யை பார்த்ததும் 100 மடங்கு அதிகமாகிருச்சு.. 'செம்பருத்தி' சீரியல் நடிகை!

Tuesday, December 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ தமிழ் சேனலில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நாயகியாக நடித்த ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் உடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தை பதிவு செய்து விஜய் சந்தித்தவுடன் தனக்கு அவர் மீதான மரியாதை 100 மடங்கு அதிகரித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த செம்பருத்தி தொலைக்காட்சி தொடரில் டைட்டில் வேடத்தில் நடித்தவர் ஷபானா. இவர் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து ஷபானா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது அதில் ஷபானாவும் கலந்து கொண்டார். இசை வெளியிட்டு நிகழ்ச்சியின் போது அவர் விஜய்யை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் குறித்த பதிவில் ’ஒருவழியாக எனது கனவு நனவாகி விட்டது. விஜய் அண்ணனை பார்த்து விட்டேன். அவரை பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை சொல்வதற்கு வார்த்தையே இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். அவரை பார்த்ததுக்கு அப்புறம் அவர் மேல இருக்கிற அன்பும் மரியாதையும் 100 மடங்கு அதிகமாகி உள்ளது. அவ்வளவுதான் சொல்வேன் என்று ஷபானா பதிவு செய்துள்ளார்.

விஜய்யுடன் ஷபானா இருக்கும் இந்த பதிவுக்கு சுமார் இரண்டரை லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.