தொண்டையில் சிக்கியில் பஜ்ஜி! சென்னை பெண் பரிதாப மரணம்!

  • IndiaGlitz, [Friday,January 03 2020]

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிட்ட போது அந்த பஜ்ஜி தொண்டையில் சிக்கியதால் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவர் மனைவி பத்மாவதி, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பத்மாவதியும் அவரது தாயாரும் பஜ்ஜி சாப்பிட முடிவு செய்து கடையிலிருந்து பஜ்ஜி வாங்கி வந்து சாப்பிட்டனர். இருவரும் பேசிக்கொண்டே பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென பத்மாவதியின் தொண்டையில் பஜ்ஜி சிக்கிக் கொண்டது. இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது

இதனை அடுத்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பத்மாவதியின் உடல் அனுப்பப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் பத்மாவதி பேசிக்கொண்டே பஜ்ஜி சாப்பிட்டதால் அவரது மூச்சுக்குழலில் பஜ்ஜி சிக்கிக் கொண்டதாகவும் இதனாலேயே அவரது அவருக்கு மரணம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது.

தாயாருடன் பேசிக்கொண்டே பஜ்ஜி சாப்பிட்ட பெண் ஒருவர் திடீரென்று மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

5 மொழிகளில் உருவாகும் பிரபல வில்லன் நடிகரின் படம்

ஹீரோ, வில்லன் என தமிழ் திரையுலகில் வலம் வந்த நடிகர் ஜீவன், காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு முன்பே சோழர் வேடத்தில் விக்ரம்: ஒரு அபூர்வ ஒற்றுமை

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

உள்ளாட்சி தேர்தல்: ரஜினி பட இயக்குனரின் சகோதரர் வெற்றி!

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

சிம்புவின் சூப்பர்ஹிட் இரண்டாம் பாக படத்தை தயாரிக்கும் அஜித் பட நிறுவனம்

நடிகர் சிம்பு சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு அவரது திரையுலக வாழ்வில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தந்தை வெற்றி பெற்ற உற்சாகத்தில் மகன் மரணம்: உள்ளாட்சி தேர்தல் சோகம்!

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சோகமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது