close
Choose your channels

தொண்டையில் சிக்கியில் பஜ்ஜி! சென்னை பெண் பரிதாப மரணம்!

Friday, January 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிட்ட போது அந்த பஜ்ஜி தொண்டையில் சிக்கியதால் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவர் மனைவி பத்மாவதி, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பத்மாவதியும் அவரது தாயாரும் பஜ்ஜி சாப்பிட முடிவு செய்து கடையிலிருந்து பஜ்ஜி வாங்கி வந்து சாப்பிட்டனர். இருவரும் பேசிக்கொண்டே பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென பத்மாவதியின் தொண்டையில் பஜ்ஜி சிக்கிக் கொண்டது. இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது

இதனை அடுத்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பத்மாவதியின் உடல் அனுப்பப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் பத்மாவதி பேசிக்கொண்டே பஜ்ஜி சாப்பிட்டதால் அவரது மூச்சுக்குழலில் பஜ்ஜி சிக்கிக் கொண்டதாகவும் இதனாலேயே அவரது அவருக்கு மரணம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது.

தாயாருடன் பேசிக்கொண்டே பஜ்ஜி சாப்பிட்ட பெண் ஒருவர் திடீரென்று மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.