சென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

சென்னையில் ஜிம் ஒன்றிற்கு சென்ற இளம் பெண்ணிடம் அதன் பயிற்சியாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். அதோடு பரங்கிமலை காவல்துறை ஆணையரிடம் அந்தப் பெண் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, தாம்பரம் அடுத்து கேம்ப் ரோட்டில் செயல்பட்டு வரும் ஜிம் ஒன்றை அதன் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் யாருக்கும் தெரியாமல் திறந்துள்ளார். அப்படி திறந்த ஜிம்மில் பெண்கள் பலர் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் இதையடுத்து கடந்த வாரம் தனியாக இருந்த ஒரு இளம்பெண்ணிடம் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அப்பெண் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனக்கு நேர்ந்ததைப் போல வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் அப்பெண் கூறி இருக்கிறார். இந்தப் பதிவைப் பார்த்த பிரேம் ஆனந்த் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு சமாதானம் பேசி இருக்கிறார். இதையடுத்து அப்பெண் தற்போது பரங்கிமலை காவல்துறை ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

More News

சாதாரண கணக்கே எனக்கு தெரியாது: காவல்துறை ஆணையரிடம் புகாரளித்த நடிகர் செந்தில் பேட்டி!

பிரபல காமெடி நடிகர் செந்தில் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு ஒன்றை தொடங்கிய மர்ம நபர் ஒருவர், அதன் மூலம் முதல்வருக்கு எதிராகவும், டாஸ்மார்க் கடை திறப்பிற்கு எதிராகவும் அவதூறான

என்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு!

சமீபத்தில் பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், தென்னாபிரிக்க வீரருமான டுப்லஸ்ஸிஸ் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்பது தெரிந்ததே

3 வயதிலேயே மகளுக்கு பாரம்பரிய கலையை கற்று கொடுக்கும் நடிகை அசின்!

நடிகை அசின் தனது 3 வயது மகளுக்கு பாரம்பரிய கலையை கற்றுத் தந்துள்ள தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ரஜினியின் கோரிக்கைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு: பரபரப்பு தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்ட கோரிக்கை ஒன்றுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஷிவாங்கியை திட்டிய அஜித் ரசிகர்கள்: சமாதானப்படுத்தும் நெட்டிசன்கள்!

சமீபத்தில் நிறைவு பெற்ற குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வேற லெவலில் பிரபலம் அடைந்தார்கள் என்பது தெரிந்தது. குறிப்பாக கோமாளிகளில் ஒருவரான ஷிவாங்கியை