சென்னையில் அடுத்த வாரம் முதல் சுட்டெரிக்கும் வெயில்!

  • IndiaGlitz, [Friday,May 12 2017]

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. மேலும் கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து வெயில் மேலும் கொளுத்தி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையின் சில பகுதி உள்பட தமிழகத்தின் ஒருசில இடங்களில் கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இனிவரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக உள்ளது வெதர்மேனின் வெப்பநிலை அறிக்கை. சென்னையில் இன்னும் ஒருசில நாட்களுக்கு மேகமூட்டம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும், வரும் திங்கள் முதல் படிப்படியாக இன்னும் வெயில் அதிகரித்து அதிகபட்சமாக 40C வரை வெப்பம் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சென்னையில் வரலாறு காணாத வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நிலத்தடி நீரின் மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டதால் கடும் தண்ணீர்க்கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வார வெயிலை சமாளிக்க ஊட்டி, கொடைக்கானல் என ஏதாவது குளிர்ப்பிரதேசத்துக்கு சென்றால் மட்டுமே தப்பிக்க முடியும்

More News

முடிந்தது 'விவேகம்' படப்பிடிப்பு: அஜித் சென்னை திரும்புவது எப்போது?

நேற்று அதிகாலை 12.01க்கு வெளியான அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் குறித்த செய்திகள் இன்னும் இணணயதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஓய்ந்தபாடில்லை.

டீசரின் வெற்றிக்கு பின்னர் எகிறும் 'விவேகம்' வியாபாரம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் நேற்று அதிகாலை வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் புயலை கிளப்பியது என்பதை பார்த்தோம்.

முதல்வருடன் விஷால் உள்பட முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், மத்திய,மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

விஷாலின் வேலைநிறுத்த போராடத்திற்கு முழு ஒத்துழைப்பு கிடைக்குமா?

நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகளுக்கு வைத்த கோரிக்கை கவனிக்கப்படாமல் இருப்பதால் வரும் ஜூன் 1 முதல் திரையுலகினர்களின் ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'அவதார்' சாதனை முறியடிகும் நாள் நெருங்கிவிட்டதா? தமிழ் சினிமாவில் பரபரப்பு

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 28ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது.