close
Choose your channels

'அவதார்' சாதனை முறியடிகும் நாள் நெருங்கிவிட்டதா? தமிழ் சினிமாவில் பரபரப்பு

Friday, May 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 28ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது. முதல் பத்து நாட்களில் ரூ.1000 கோடி வசூலை தாண்டிய இந்த படம், தற்போது ரூ.1500 கோடி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இரண்டு வாரங்கள் முழுமையாக முடிந்த நிலையிலும் இந்த படத்திற்கு பெரிய அளவில் திரையரங்குகளில் கூட்டம் இருப்பதால் இந்த படத்தின் மொத்த வசூல் அசைக்க முடியாத சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், 'இயக்குனர் ராஜமெளலியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கினால், அந்த படத்தின் வசூல், 'அவதார்' படத்தின் வசூல் சாதனையை மிஞ்சிவிடும்' என்று தெரிவித்த கருத்தை ஏற்கனவே பார்த்தோம். 'நல்ல கதை கிடைத்தால் ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன்' என்று ராஜமெளலியும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் ரஜினியையும் ராஜமெளலியையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதுகுறித்த நல்ல செய்தி வெகுவிரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அல்போன்ஸ் புத்திரன் கூறியது போல 'அவதார்' சாதனையை முறியடிக்கும் தென்னிந்திய சினிமா வெளியாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.