பைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது!

  • IndiaGlitz, [Saturday,January 25 2020]

சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் பைக்கில் செல்லும்போது நடந்து சென்ற பெண்களின் பின்புறமாக தட்டிவிட்டு சென்றுள்ளார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று சென்னையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நடந்து சென்ற பெண்களின் பின்புறமாக தட்டிவிட்டு மிக வேகமாக பைக்கில் சென்று விட்டார். இதனையடுத்து அந்த பெண்கள் கூச்சல் போட்டனர் உடனே அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் பைக்கில் சென்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சதீஷ்குமார் என்று தெரியவந்தது. திருமணமாகாத இவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் இதேபோல் அவர் பலமுறை பைக்கில் செல்லும்போது பெண்களின் பின்புறத்தை தட்டி விட்டு தப்பித்து இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

More News

இந்தியாவில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேர் காய்சĮ

என்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை

பிரபல நடிகை வரலட்சுமி கடந்த 2012ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போட்டி' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் விஜய், விஷால், தனுஷ், சிம்பு, உள்பட

இந்திய சினிமாவில் புதுவிதமான திரைக்கதை: சிம்பு இயக்குனரின் அடுத்த படம்

சிம்பு நடித்த கெட்டவன் திரைப்படத்தை இயக்கிய என்.கே.கண்டி இயக்கிய அடுத்த திரைப்படம் டே நைட். முழுக்க முழுக்க த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின்

பிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

மும்பையை சேர்ந்த பிரபல டிவி சீரியல் நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல், ரஜினியை அடுத்து அஜித் படத்தில் இணையும் நிவேதா தாமஸ்!

'பாபநாசம்' திரைப்படத்தின் கமலஹாசனின் மகளாக நடித்த நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் வெளியான 'தர்பார்' திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து தனது உருக்கமான நடிப்பில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்