close
Choose your channels

பைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது!

Saturday, January 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் பைக்கில் செல்லும்போது நடந்து சென்ற பெண்களின் பின்புறமாக தட்டிவிட்டு சென்றுள்ளார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று சென்னையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நடந்து சென்ற பெண்களின் பின்புறமாக தட்டிவிட்டு மிக வேகமாக பைக்கில் சென்று விட்டார். இதனையடுத்து அந்த பெண்கள் கூச்சல் போட்டனர் உடனே அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் பைக்கில் சென்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சதீஷ்குமார் என்று தெரியவந்தது. திருமணமாகாத இவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் இதேபோல் அவர் பலமுறை பைக்கில் செல்லும்போது பெண்களின் பின்புறத்தை தட்டி விட்டு தப்பித்து இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.