close
Choose your channels

அனைத்து திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ்: சென்னையில் பரபரப்பு

Sunday, May 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா தாக்கம் மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக கோயம்பேடு சந்தையால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அனைவரையும் அதிர்ச்சி அளித்து வருகிறது

இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு முழுவதும் நிறைந்து விட்டதை அடுத்து இனி புதியதாக வரும் கொரோனா நோயாளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஆலோசனை செய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி சென்னையில் கொரோனா வார்டுகளை கூடுதலாக அமைக்க அனைத்து திருமண மண்டபங்களையும் மாநகராட்சிக்கு தருமாறு திருமண மண்டப உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே விஜயகாந்த் உள்பட பல பிரமுகர்கள் தங்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களை கொரோனா வார்டாக மாற்ற அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது அனைத்து திருமண மண்டபங்களையும் சென்னை மாநகராட்சி தருமாறு கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து திருமண மண்டப உரிமையாளர்கள் இதற்கு ஒப்புக் கொள்வார்களா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

சென்னையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் திருமண மண்டபங்களை கொரோனா வார்டுகளாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.