close
Choose your channels

ஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் தலைமுடிக்கு வந்த ஆபத்து!

Saturday, January 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண் ஒருவரின் தலைமுடி திடீரென வெட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நெற்குன்றத்தில் இருந்து அம்பத்தூருக்கு ஷேர் ஆட்டோவில் ஒரு இளம்பெண் சென்று கொண்டிருந்தார். திடீரென அவரது தலை முடியை பின்னால் இருப்பவர்கள் ஏதோ செய்வது போல் உணர்ந்து அவர் திரும்பிப் பார்த்தபோது தலைமுடி பாதிக்குமேல் வெட்டப்பட்டு இருந்தது தெரிந்தது இதனால் அதிர்ச்சியில் அவர் அலறினார்.

உடனடியாக ஷேர் ஆட்டோவை நிறுத்திய டிரைவர் என்ன ஏது என்று விசாரித்தபோது எனது தலை முடியை காணவில்லை என்று அவர் கத்தியதால் ஷேர் ஆட்டோவில் இருந்த மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக பின்னால் உட்கார்ந்திருந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் அந்த இளம்பெண்ணின் வெட்டப்பட்ட தலைமுடி இருந்தது. இதனையடுத்து இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் விசாரித்தபோது சும்மா விளையாட்டுக்காக வெட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தலை முடியை இழந்த இளம்பெண்ணும் புகார் அளிக்க விரும்பவில்லை என்று கூறியதை அடுத்து இருவரையும் எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் செல்லும் பெண்கள் தங்கள் தலைமுடியையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.