close
Choose your channels

திருமணமான 24வது நாளில் சென்னை பெண் தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Wednesday, November 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 24 வது நாளில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அருகே உள்ள ஆவடி என்ற பகுதியைச் சேர்ந்த ராதா என்ற 24 வயது பெண், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி பாலாஜியும் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர்

இந்த நிலையில் பாலாஜியின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், ராதாவிடம் பாலாஜியின் தந்தை தனது மகளின் திருமணம் முடியும் வரை தந்தை வீட்டிலேயே இருக்குமாறும் அதன் பின்னர் ஒரு நல்ல நாளில் நாங்களே முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். இதனை நம்பி ராதா தனது தந்தை வீட்டிற்குச் சென்று உள்ளார்

ஆனால் கடந்த சில நாட்களாக ராதாவிடம் பாலாஜி பேசுவதை தவிர்த்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சந்தேகம் அடைந்த ராதா, பாலாஜி வீட்டுக்கு சென்று வந்ததாகவும், மீண்டும் திரும்பி வந்தபோது ராதா மிகவும் சோர்வுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென தனது தந்தை வீட்டில் ராதா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.