பிக்பாஸ் சனம்ஷெட்டி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Friday,November 06 2020]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சனம்ஷெட்டியின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பங்கேற்ற தர்ஷன் மீது நடிகை சனம்ஷெட்டி சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் நம்பிக்கை கொடுத்து விட்டு, அதன் பின்னர் தற்போது தன்னை திருமணம் செய்ய தர்ஷன் மறுக்கிறார் என்றும், தன்னை பற்றி தரக்குறைவாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதாகவும் இதனால் தர்ஷன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார்

இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வந்தது. ஆனால் தனது புகார் குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தனது புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சனம்ஷெட்டி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது சனம்ஷெட்டி புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

மலை உச்சியில் இருந்து இளம்பெண் எடுத்த செல்பி… அதற்குப்பின் நடந்த சோகச் சம்பவம்!

செல்பி மோகம் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டுபோய் விட்டு விடுகிறது. மத்தியப்பிரதேசத்தின் மலைப்பாங்கான சுற்றுலா பகுதியில் இருந்து

ஹாட்ரிக் சாதனை… 2 முறை கின்னஸ் சாதனை புரிந்த 5 வயது சென்னை சிறுவன்!!!

பொதுவாக சிறிய வயது குழந்தைகள் கார்ட்டூனை பார்த்து விட்டாலே போதும் செம குஷியா மாறிடுவாங்க..

லஞ்சம் கொடுப்பதற்காக தட்டு ஏந்தி பிச்சை எடுத்த பொதுமக்கள்… களைக்கட்டும் போராட்டம்!!!

கள்ளக்குறிச்சி அருகே கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்று இருக்கிறது.

குடுமிபிடி சண்டைக்கு நடுவே ஒரு நாய்க்கு வழங்கப்பட்ட மேயர் பதவி!!! திடுக்கிடும் தகவல்!!!

உலக அளவில் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த வார இறுதியில்

அடுத்த வாரம் கேப்டன் ஆரி? கதி கலங்கும் சம்யுக்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர்களாக ஆரி, சோம் மற்றும் நிஷா ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் வைக்கப்படும் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்