close
Choose your channels

பிக்பாஸ் சனம்ஷெட்டி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Friday, November 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சனம்ஷெட்டியின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பங்கேற்ற தர்ஷன் மீது நடிகை சனம்ஷெட்டி சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் நம்பிக்கை கொடுத்து விட்டு, அதன் பின்னர் தற்போது தன்னை திருமணம் செய்ய தர்ஷன் மறுக்கிறார் என்றும், தன்னை பற்றி தரக்குறைவாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதாகவும் இதனால் தர்ஷன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார்

இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வந்தது. ஆனால் தனது புகார் குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தனது புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சனம்ஷெட்டி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது சனம்ஷெட்டி புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.