உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் தனி அதிகாரிகள் மூலமே நிர்வாகம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விட்டு வரும் நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றின் முக்கிய தீர்ப்பை சென்னை ஐகோர்ட் சற்று முன்னர் வழங்கியுள்ளது.

இதன்படி நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இதுகுறித்த அறிவிப்பை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டபோதிலும் தேர்தலை நடத்த தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் முன்வருமா? அல்லது அப்பீலுக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

வெற்றி மேல் வெற்றி கிடைக்க வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்

முன்றே படங்கள் மட்டுமே இயக்கி, அதில் ஒன்றில் தேசிய விருது பெற்று, முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் வெற்றிமாறன் மட்டுமே...

பிக்பாஸ்: நாடகக்காரி விருதை நாடகக்காரியிடம் இருந்து பெற்ற சுஜா

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70வது நாளை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு விருது வழங்கும் நடைபெறுவதாக இன்றைய புரமோ வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மறுத்த பிரபல நடிகை

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேறு புதிய போட்டியாளர்கள் கிடைக்காததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே மீண்டும் மீண்டும் இடம்பெற்று வருகின்றனர்...

ஏழைகள் ஏழைகளாகவே சாகவேண்டுமா? அனிதா மரணம் குறித்து சிவகுமார்

நீட் தேர்வு காரணமாக தனது இன்னுயிரை நீத்து கொண்ட அனிதா குறித்தும், இன்றைய கல்விமுறை, நீட் தேர்வால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள் குறித்தும் நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியல் முக்கியம். விஜய்சேதுபதி

நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் மரணத்திற்காக சென்னை லயோலா கல்லூரியில் 'அனிதா நினைவேந்தல்' கூட்டம் நடைபெற்றது.