கமல் மீது வழக்குப்பதிவா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் 'இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது' என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன

இந்த நிலையில் இந்து தீவிரவாதம் தொடர்பான கமல்ஹாசனின் கருத்தை எதிர்த்து தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணைக்கு பின்னர் 'நடிகர் கமல் மீதான புகாரை விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம்' என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இதேபோல் நிலவேம்பு குறித்து கமல்ஹாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் 'நிலவேம்பு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம்' என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் இந்த விஷயத்தில் கமல் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று முடிவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெற்றி பெறாவிட்டாலும் சொன்ன சொல்லை காப்பாற்றிய சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்டவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றால் அந்த பணத்தின் மூலம் பொதுமக்களுக்கு நூலகம் ஒன்றை கட்டித்தர வேண்டும்

நாச்சியார் பட விவகாரம்: ஜோதிகா, பாலா மீது நீதிமன்றத்தில் வழக்கு

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

திருமணத்திற்கு பின்னர் நமீதா நடிப்பாரா? கணவர் வீரா பதில்

நடிகை நமீதா-வீரா திருமணம் இன்று காலை திருப்பதில் சிறப்பாக நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் திரையுலகினர் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

தேர்தல் நேரத்தில் கலக்க வரும் விஷ்ணு மஞ்சுவின் 'குறள் 388'

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கும் 'குறள் 388' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் அவருடைய பிறந்த நாளில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது

கார்த்திக் சுப்புராஜூடன் 2வது முறையாக இணையும் தனுஷ்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த பெரிய பட்ஜெட் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.