close
Choose your channels

கமல் மீது வழக்குப்பதிவா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Friday, November 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில் 'இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது' என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன

இந்த நிலையில் இந்து தீவிரவாதம் தொடர்பான கமல்ஹாசனின் கருத்தை எதிர்த்து தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணைக்கு பின்னர் 'நடிகர் கமல் மீதான புகாரை விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம்' என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இதேபோல் நிலவேம்பு குறித்து கமல்ஹாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் 'நிலவேம்பு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம்' என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் இந்த விஷயத்தில் கமல் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று முடிவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.