பிரபல இயக்குனரின் வழக்கு: சின்மயி, லீலா மணிமேகலைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Thursday,January 20 2022]

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பதிவு செய்த வழக்கில் பாடகி சின்மயி மற்றும் கவிஞர் லீனா மணிமேகலை ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

‘திருட்டுபயலே’ ’கந்தசாமி’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசி கணேசன். இவர் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் அந்த திரைப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாடகி சின்மயி, ‘கவிஞர் லீலா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் அளித்து இருந்தது இளையராஜா அவர்களுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தன்மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் சின்மயி, லீலா மணிமேலை குறித்து இயக்குனர் சுசிகணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுசிகணேசனுக்கு எதிரான, உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை பொதுவெளியில் வெளியிட கவிஞர் லீனா மணிமேகலை மற்றும் பாடகி சின்மயி ஆகிய இருவருக்கும் இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

More News

கரகர குரலால் வேலை இழப்பு... நியாயம் கேட்ட பெண்மணிக்கு 1 கோடி கிடைத்த சம்பவம்!

இங்கிலாந்த நாட்டிலுள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் சத்தமாகப்

தடுப்பூசியை விரும்பாமல் பாடகி செய்த காரியம்… சோகத்தில் முடிந்த சம்பவம்!

செக் குடியரசு நாட்டில் பிரபல நாட்டுப்புற பாடகி ஒருவர் கொரோனா

பிக்பாஸ் பாவனிக்கு வந்த திடீர் சோதனை: ரசிகர்கள் ஆறுதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனிக்கு திடீரென சோதனை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

திரைப்பட விமர்சகர்கள் எல்லோரும் நாட்டுக்கே தேவையில்லாதவர்கள்: ஷகிலா

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒரு கவர்ச்சி நடிகை என்ற தனது இமேஜை மாற்றிக் கொண்டவர் நடிகை ஷகிலா என்பது தெரிந்ததே

பாதியில் படிப்பை விட்டு பஞ்சர் ஒட்டிய மாணவிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!

படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் பணம் இல்லாத காரணத்தினால் பஞ்சர் ஒட்டும் கடையில் பணிபுரிந்து வந்த மாணவி ஒருவரை சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.