சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

உலகம் முழுவதும் பரவி ஏராளமான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் தாக்கி உள்ளது. கொரோனா வைரஸால் இலங்கையில் இதுவரை 115 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து கடந்த 14 நாட்களில் சென்னையிலிருந்து இலங்கை திரும்பியவர்கள் உடனடியாக தாங்களே விவரங்களை தெரிவிக்கும்படி இலங்கை சுகாதார துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது மேலும் அதிக ஆபத்துள்ள நகரங்களில் ஒன்றாக சென்னை இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்ததை அடுத்து நேற்று சென்னையில் இருந்து இலங்கை திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கை அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பொருளாதாரத்தைச் சீர்செய்யவே முடியாது!!! மனமுடைந்த ஜெர்மன் நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை!!!

கொரோனா பாதிப்பினால் உலகம் கடும் பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில்

ரூ.750 கோடி கொரோனா தடுப்பு நிதி கொடுத்த பிரபல விளையாட்டு வீரர்

உலகப்புகழ் பெற்ற முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி நிதியளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுடன் வந்தால் மது வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: தற்கொலை செய்து கொண்ட நிதியமைச்சர்

கொரோனா வைரஸ் உலகமெங்கும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்ச்சி அடையச் செய்துள்ளது 

வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்? கமல்ஹாசனின் கொரோனா கவிதை

கொரோனா வைரஸால் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அஞ்சி நடுங்கி வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,