close
Choose your channels

சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

Monday, March 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் பரவி ஏராளமான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் தாக்கி உள்ளது. கொரோனா வைரஸால் இலங்கையில் இதுவரை 115 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து கடந்த 14 நாட்களில் சென்னையிலிருந்து இலங்கை திரும்பியவர்கள் உடனடியாக தாங்களே விவரங்களை தெரிவிக்கும்படி இலங்கை சுகாதார துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது மேலும் அதிக ஆபத்துள்ள நகரங்களில் ஒன்றாக சென்னை இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்ததை அடுத்து நேற்று சென்னையில் இருந்து இலங்கை திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கை அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos