close
Choose your channels

மீண்டும் ரெட் அலர்ட்: தாங்குமா சென்னை?

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னைக்கு கனமழை பெய்யும் என மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை கனமழையால் வெள்ளத்தில் மிதந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளத்தில் இருந்து மீண்டு வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் நவம்பர் 18ஆம் தேதி அன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையை சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் கனமழை பெய்ததால் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் மீண்டும் சென்னை வெள்ளத்தில் மிதக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.