அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே சென்னை மெட்ரோவில் அனுமதி: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் காலை 8 மணிவரை அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டும் அதாவது அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயிலில் அனுமதி. அதன்பின் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழக்கம்போல் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மெட்ரோ ரயில் இயங்காது.

அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அலுவலகத்தில் இருந்து திரும்பி வீட்டுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையில்லாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களையும் அதிக கூட்டத்தையும் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

எது சூரியனில் இருந்து கொரோனா வேவ் வருதா?!.. வாட்சப் வதந்திகளை நம்பாதீர்கள் மக்களே..!

லதா மேடம் ஒன்னும் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல. அவர் சொன்ன முக்கிய தகவலை பயத்தோடு மற்றவர்களுக்கு பகிர. முதலில் யார் அந்த லதா மேடம்..?!

கொரோனா குறித்த பொய்யான செய்திகளை நம்பாதீர்கள்: பிரபல நடிகரின் வீடியோ

கொரோனா வைரஸை எதிர்கொள்ள, வைரஸின் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனாவின் தீவிரம் குறித்தும்

வீட்டை விட்டு வெளியே வந்தால் இரண்டு வருடம் ஜெயில், 25000 அபராதம்: அதிரடி அறிவிப்பு 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு: அமைச்சர் தகவல்

பல நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே

கொரோனா வைரஸ் எங்கிருந்து, எப்படி பரவியது??? சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆய்வுமுடிவு!!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா Covid-19 (novel), அறிவியல் குறியீட்டில் SARS-CoV-2 வைரஸ் பரவலுக்கு இதுவரை காரணம் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.