close
Choose your channels

விருந்துக்கு சென்ற உறவினர்கள் வீட்டில் கொள்ளையடித்த காதல் ஜோடி கைது!

Monday, November 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு விருந்துக்கு சென்று அந்த வீட்டில் உள்ள பொருட்களை நோட்டமிட்டு அதன் பின் இன்னொரு நாள் அதே வீடுகளில் கொள்ளை அடித்த காதல் ஜோடி ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கத்தில் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் வீட்டில் சமீபத்தில் திருட்டு நடந்தது. இது குறித்து ஜெகதீஷ் காவல்துறையினரிடம் புகார் கொடுக்க, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஜெகதீஷ் வீட்டிற்கு ஒரு காதல் ஜோடி வ்ந்து சென்றது சிசிடிவியில் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் யார் என்பது குறித்து ஜெகதீஷிடம் விசாரணை செய்த போது இருவரும் தனது மனைவியின் உறவினர்கள் என்று கூறினார். இதேபோல் ஓரிரு முறை இந்த காதல் ஜோடி தங்கள் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் பெயர் கார்த்திகேயன் மற்றும் நித்யா என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த காதல் ஜோடி மீது சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தபோது ஜெகதீஷ் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

பொறியியல் படித்து முடித்துள்ள கார்த்திகேயன் தன்னுடன் படித்த நித்யா என்பவரை காதலித்து உள்ளார். இந்த நிலையில் கார்த்திகேயனுக்கு சமீபத்தில் வேலை பறிபோனதால் இருவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் திருட திட்டமிட்டனர். இதனை அடுத்து முதல் கட்டமாக உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு விருந்தினராகச் சென்று அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை நோட்டம் விடுவது, அதன் பின் இன்னொரு நாள் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் சென்று திருடுவது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே மதுரவாயல் பகுதியில் நித்யாவின் தோழி வீட்டிற்கு விருந்தினராக சென்று அதன் பின் இன்னொரு நாள் தோழி இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டை திறந்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர்.

இதனை அடுத்து ஜெகதீஷின் வீட்டிற்கும் உறவினராக சென்று நோட்டமிட்டு அவருடைய வீட்டில் உள்ள சாவியை திருடி பின்னர் போலீ சாவி தயாரித்து ஜெகதீஷும் அவருடைய மனைவியும் வீட்டில் இல்லாதபோது கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து காதல் ஜோடியை போலீசார் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்ற நபர்களால் இனி வீட்டிற்கு நெருங்கிய உறவினர் விருந்தினராக வந்தாலும் சந்தேகம் அடையும் நிஅலி ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.