மனைவிகளின் உதவியால் வித்தியாசமான முறையில் தங்கம் கடத்திய சென்னை நபர்

  • IndiaGlitz, [Thursday,February 15 2018]

வெளிநாட்டில் இருந்து தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வரும் கும்பல்கள் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறைகளை கடைபிடித்தாலும் விமான நிலைய அதிகாரிகளின் கழுகுப்பார்வையில் சிக்கிவிடும் கதை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சென்னையை சேர்ந்த பாலசந்திரன் என்பவர் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வருபவர். இவர் தனது சொந்த வீட்டை சமீபத்தில் ரூ.65 லட்சத்திற்கு விற்பனை செய்து அந்த பணத்தை கொண்டு வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் வராதவகையில் ஒவ்வொரு முறையும் அவர் தங்கத்தை கடத்தும்போது மனைவிகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தார்

இந்த நிலையில் இன்று பாலசந்திரன் தனது மனைவிகளில் ஒருவரான ஷிவாதேவியுடன் தங்கத்தை கடத்தி மும்பை விமான நிலையத்தில் இறங்கியபோது விமான நிலைய அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். பின்னர் அவர்களை தனியறையில் வைத்து சோதனை செய்தபோது ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட பிராவில் ஷிவாதேவி தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யபப்ட்டனர். இதற்கு முன் ஓரிரு முறை வெற்றிகரமாக தங்கத்தை கடத்தி லாபம் பார்த்ததாகவும் இந்த முறை தான் மாட்டிக்கொண்டதாகவும் பாலசந்திரன் அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

More News

லைகாவில் இருந்து விலகி வந்த செயல் அதிகாரிக்கு ரஜினி கொடுத்த முக்கிய பதவி

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லைகா நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்த ராஜூமகாலிங்கம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதாக கூறப்பட்டது.

ஐபிஎல் 2018: தல தோனியின் சிஎஸ்கே மோதும் போட்டிகளின் விபரங்கள்

11வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' படத்தின் ஆச்சரியமான ரன்னிங் டைம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

காதலர் தினத்தில் விவாகரத்து செய்த தமிழ் நடிகர்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' என்னும் தொடரில் நடித்து பின்னர் பெரிய திரைக்கு அறிமுகமான நடிகர் யுதன் பாலாஜி.

அரசியலுக்கு வந்தபின் சினிமாவுக்கு முழுக்கா? கமல் விளக்கம்

கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இனிமேல் அவர் புதிய சினிமாக்களில் நடிக்க மாட்டார் என்றும் 'இந்தியன் 2' படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.