close
Choose your channels

லைகாவில் இருந்து விலகி வந்த செயல் அதிகாரிக்கு ரஜினி கொடுத்த முக்கிய பதவி

Thursday, February 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லைகா நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்த ராஜூமகாலிங்கம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான அறிவிப்பு ரஜினியிடம் இருந்து வெளிவந்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் '2.0' படத்தில் பணியாற்றியபோது ரஜினிக்கும் ராஜூ மகாலிங்கத்திற்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்த ராஜூமகாலிங்கம், ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரஜினியின் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.