close
Choose your channels

வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தையே கத்தியால் குத்திய நபர்: சென்னையில் பரபரப்பு

Sunday, September 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் உள்பட அவரது குடும்பத்தினரை வாடகைக்கு இருந்த ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

சென்னை சூளைமேடு பகுதியில் நாராயணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மாடி வீடு ஒன்றில் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வருமானம் இல்லாமல் இருந்ததால் வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார்

5 மாத வாடகையை வீட்டின் உரிமையாளர் சந்திரமோகன் அவ்வப்போது கேட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வேலையில் இருந்து திரும்பி வந்த நாராயணனிடம் வீட்டின் உரிமையாளர் சந்திரமோகன் மீண்டும் வாடகை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

வாக்குவாதம் குறித்த சத்தம் கேட்ட சந்திரமோகனின் மகன் சதீஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். மூன்று பேரும் மாறி மாறி வாடகை கேட்டதால் ஆத்திரமடைந்த நாராயணன் திடீரென வீட்டினுள்ளே இருந்த கத்தியை எடுத்து வந்து மூவரையும் சரமாரியாக குத்தியுள்ளார்

இதில் சுகன்யாவின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு வாடகை கேட்டதால் வீட்டின் உரிமையாளரின் குடும்பத்தையே கத்தியால் குத்திய வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.