கனமழை எதிரொலி: சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்!

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இன்று அதாவது நவம்பர் 8ஆம் தேதி காலை 6 மணி முதல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கனமழை பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் பின்வருமாறு:

1. ஈவேரா சாலை கங்கி ரெட்டி சுரங்கப்பாதை

2. வியாசர்பாடி சுரங்கப்பாதை

3. கணேஷபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன

மழை நீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:

1. ஈவேரா சாலையில் சென்னை சென்ட்ரல் சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈவேரா சாலை காந்தி இர்வின் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்

2. பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்லலாம். மார்ஷல் ரோட்டில் இருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு என சென்னை மாநகர போக்குவரத்து தெரிவித்துள்ளது

More News

சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

வடகிழக்கு பருவமழை மாற்றம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அக்சராவை கேப்டனாக விடாமல் தலையை உடைத்த சிபி!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதற்கான டாஸ்க் வைக்கப்படும் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் வைக்கப்படும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன

நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு

நாளை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 

சென்னைக்கும் இன்னும் கனமழை காத்திருக்கு: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு உள்ளதால்

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவர்: முக ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

முதல்வர்களில் நீங்கள்தான் முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்