close
Choose your channels

அக்சராவை கேப்டனாக விடாமல் தலையை உடைத்த சிபி!

Monday, November 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதற்கான டாஸ்க் வைக்கப்படும் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் வைக்கப்படும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன

கேப்டன் பதவிக்கு போட்டியிடும் நபர்களின் பொம்மைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதன் அருகில் ஒரு பானை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போட்டியாளர்கள் யாரை கேப்டனாக்க தேர்வு செய்ய விரும்பவில்லையோ அந்த அந்த நபரின் பொம்மையின் பானையை உடைக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கின்றார்

இதனை அடுத்து முதல் நபராக செல்லும் சிபி, அக்சராவின் தலையில் உள்ள பானையை உடைக்கிறார். தனக்கு தற்போதுதான் கேப்டனாக வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அதனால் தனக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அக்சரா வேண்டுகோள் விடுத்தும், அதனை கவனத்தில் கொள்ளாமல் சிபி, அக்சராவின் தலையிலுள்ள பானையை உடைத்ததால் அக்ஷரா மனம் வருந்தி அழும் காட்சிகளோடு இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரியங்கா தன்னை கேப்டனாக்க வேண்டும் என்று கூறும்போது இந்த வாயாடியை யாரும் கேப்டனாக்க வேண்டாம் என்றும் நிரூப் தடுக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.