close
Choose your channels

பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் அரைநிர்வாண மர்ம நபர் யார்? சென்னையில் பரபரப்பு!

Tuesday, December 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அரை நிர்வாண மர்ம மனிதன் ஒருவன் பெண்களின் ஆடைகளை மட்டும் குறிவைத்து திருடி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிகாலையில் மர்ம மனிதன் ஒருவன் அங்கு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் ஜன்னல் கதவுகளை திறந்து பெண்களின் ஆடைகளை மற்றும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சிசிடிவி விடியோக்களை ஆய்வு செய்த அந்த பகுதியினர் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல் நிலைய அதிகாரிகள் சிசிடிவி வீடியோவை பார்த்து அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் மர்ம மனிதனை தேடி வருகின்றனர். பெண்களின் ஆடைகளை மட்டுமே குறி வைத்து திருடும் அந்த மர்ம மனிதன் ஒரு சைக்கோவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.