close
Choose your channels

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

Monday, May 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை வடபழனி பகுதியில் சிவன் கோவில் தெற்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஐந்துபேர் படுகாயம் அடைந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்கசிவு காரணமாக முதலில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் தீப்பிடித்ததாகவும், அந்த தீ படிப்படியாக குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும், இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் உடனே சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், தீ விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.