close
Choose your channels

இரண்டாவது கணவனை பிரிந்து முதல் கணவனின் மச்சினனுடன் 'தொழில்' செய்த சென்னை இளம்பெண் கைது!

Friday, December 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து முதல் கணவரின் மச்சினனுடன் நட்புடன் பழகி வரும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் அவருடன் சேர்ந்து செயின் பறிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சென்னை அம்பத்தூர் அருகே அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது இரு சக்கர வாகனம் ஒன்றில் ரெயின் கோட் அணிந்த ஒருவர் தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது

இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ரேவதி என்ற பெண்ணும் அவருடைய ஒரு இளைஞரும் இருசக்கர வாகனத்தில் வருவதை கண்டு அவர்களை மடக்கினர். அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் கலர் மற்றும் கைகளில் அணிந்துள்ள ஆபரணங்கள் ஆகியவை சிசிடிவி கேமராவில் பார்த்த வீடியோ உடன் ஒத்துப் போனதால் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணின் பெயர் ரேவதி என்றும் அவருடன் வந்தவர் அவருடைய முதல் கணவரின் மச்சினன் என்றும் தெரியவந்தது. முதல் கணவரை விவாகரத்து செய்து, அதன் பின் இரண்டாவது கணவரான ஜெயச்சந்திரன் என்பவருடன் ரேவதி வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜெயச்சந்திரனுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவரையும் பிரிந்து முதல் கணவரின் மச்சினனுடன் சேர்ந்து செயின் திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து ரேவதியுடன் நடந்த விசாரணையின் போது தனக்கு நிறைய கடன் இருப்பதாகவும் அதனால் முதல் கணவரின் மச்சினனுடன் இணைந்து இந்த தொழிலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த திருட்டு தொழிலுக்காகவே தவணையில் ஒரு புதிய பைக் வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண்களிடம் செயின் பறிப்பு தொழிலில் ஈடுபட்டது ஒரு பெண் என்பது பலருக்கும் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.