அரைநிர்வாண குளியல் வீடியோ: 16 வயது சிறுமியை மிரட்டிய சென்னை வாலிபர் கைது!

16 வயது சிறுமியின் அரைநிர்வாண குளியல் வீடியோவை வைத்து மிரட்டிய சென்னையை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவருடன் பழகி உள்ளார். முதலில் நட்பாக பழகிய அந்த வாலிபர் திடீரென பாலியல் ரீதியில் பேசத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனை அடுத்து கவுசல்யா என்ற பெண்ணின் பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அந்த வாலிபர் வாய்ஸ்செயலி மூலம் பெண் குரலில் அந்த சிறுமியுடன் பேசியுள்ளார். ஏற்கனவே பேசிய வாலிபர் தான் பெண் குரலில் பேசுகிறார் என்பதை அறியாத அந்த 16 வயது சிறுமி, அவரிடம் சகஜமாக பழகி உள்ளார்.

ஒரு நாள் குளித்துக் கொண்டிருக்கும்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ காலில் அந்த சிறுமி பேசியதாகவும், இதனையடுத்து அந்த நேரத்தில் அந்த வாலிபர் சிறுமி குளிக்கும் அரை நிர்வாண காட்சியை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிகிறது. பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் சிறுமிக்கு அனுப்பி இத்தனை நாள் உன்னிடம் பெண் குரலில் பேசியது நான் தான் என்றும் தன்னுடன் உறவு கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தாயிடம் அழுதுகொண்டே கூற, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் அந்த வாலிபரை பிடித்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் வாலிபர் ஒரு பட்டதாரி என்றும் வேலை தேடி வருபவர் என்றும் வேலை கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் சிறுமிகளை மிரட்டுவதையே வேலையாக செய்து கொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

வளைவில் திரும்பும்போது காரில் இருந்து கீழே விழுந்த குழந்தை: வைரலாகும் வீடியோ

வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று வளைவில் திரும்பும் போது திடீரென காரில் இருந்த குழந்தை ஒன்று கீழே விழுந்த சிசிடிவி வீடியோ காட்சியில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

ஓடும் ரயிலில் சாகசம் செய்த 20 வயது வாலிபர் பரிதாப பலி!

https://tamil.news18.com/news/national/train-stunts-kill-20-year-old-ambulance-driver-from-kalyan-san-239125.html

தளபதியின் திரைத்துறை தம்பி: எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டது யாரை?

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடித்த ;மான்ஸ்டர்; திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது 'இரவைக்காலம்

முதியோர் இல்லத்தில் காதல்: 65 வயது மணமகளை மணந்த 66 வயது மணமகன்!

கேரள மாநிலத்திலுள்ள திருச்சூரில் 66 வயது முதியவர் ஒருவருக்கு 65 வயது முதிய பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்ததால் இருவருக்கும் அந்த இல்லத்தை சேர்ந்தவர்கள் திருமணம் நடத்தி வைத்துள்ளனர் 

கற்பனை செய்ய முடியாத கருவி: 'குடியுரிமை கோலம்' குறித்து பிசி ஸ்ரீராம் 

மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது