close
Choose your channels

அரைநிர்வாண குளியல் வீடியோ: 16 வயது சிறுமியை மிரட்டிய சென்னை வாலிபர் கைது!

Monday, December 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

16 வயது சிறுமியின் அரைநிர்வாண குளியல் வீடியோவை வைத்து மிரட்டிய சென்னையை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவருடன் பழகி உள்ளார். முதலில் நட்பாக பழகிய அந்த வாலிபர் திடீரென பாலியல் ரீதியில் பேசத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனை அடுத்து கவுசல்யா என்ற பெண்ணின் பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அந்த வாலிபர் வாய்ஸ்செயலி மூலம் பெண் குரலில் அந்த சிறுமியுடன் பேசியுள்ளார். ஏற்கனவே பேசிய வாலிபர் தான் பெண் குரலில் பேசுகிறார் என்பதை அறியாத அந்த 16 வயது சிறுமி, அவரிடம் சகஜமாக பழகி உள்ளார்.

ஒரு நாள் குளித்துக் கொண்டிருக்கும்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ காலில் அந்த சிறுமி பேசியதாகவும், இதனையடுத்து அந்த நேரத்தில் அந்த வாலிபர் சிறுமி குளிக்கும் அரை நிர்வாண காட்சியை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிகிறது. பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் சிறுமிக்கு அனுப்பி இத்தனை நாள் உன்னிடம் பெண் குரலில் பேசியது நான் தான் என்றும் தன்னுடன் உறவு கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தாயிடம் அழுதுகொண்டே கூற, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் அந்த வாலிபரை பிடித்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் வாலிபர் ஒரு பட்டதாரி என்றும் வேலை தேடி வருபவர் என்றும் வேலை கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் சிறுமிகளை மிரட்டுவதையே வேலையாக செய்து கொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.