பிரபல இயக்குனர் சேரனின் முக்கிய அறிக்கை

  • IndiaGlitz, [Thursday,October 29 2015]

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் நடிகர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டாலும், தேர்தலுக்கு பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர் என்பதை ஏற்கனவே நடந்த ஒரு சில சம்பவங்களின் மூலம் தெரிந்து கொண்டோம். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருசிலர் அத்துமீறி பேசியவர்களும் தற்போது தங்களுடைய தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சரத்குமார் அணிக்காக தேர்தல் பணி செய்த பிரபல இயக்குனர் சேரன், தேர்தலின்போது விஷால், கார்த்தி, ரித்தீஷ் குறித்து தவறாக பேசியிருந்தால் தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

நாசர், விஷால், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் மீது தனக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதங்களும் இல்லை என்றும், நடிகர்களுக்காக இரவுபகல் பாராமல் பாடுபட்ட சரத்குமாருக்காகவே அந்த அணிக்கு பிரச்சாரம் செய்ததாகவும் சேரன் கூறினார்.

மேலும் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர்களை தன்னுடைய படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தபோது அவர்கள் தனக்கு சரியான முறையில் பதில் கூறவில்லை என்றும், அந்த கோபத்தில் அவர்களை பற்றி உணர்ச்சிவசப்பட்டு ஒருசில வார்த்தைகளை பேசிவிட்டதாகவும் அதற்காகவும் தான் வருத்தப்படுவதாகவும் இயக்குனர் சேரன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

சமந்தாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது

விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சமந்தாவின் நீண்ட நாள் கனவு, பழம்பெரும் நடிகை...

'தூங்காவனம்' படத்தின் சென்சார் விபரங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த் 'தூங்காவனம்' படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து கொண்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தோம்...

'கபாலி'யால் வாழ்க்கையின் முதல் அனுபவத்தை பெற்ற இளம் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் மலேசியா சென்றுள்ளனர்...

சிம்புவின் 'இது நம்ம ஆளு' இசை வெளியீடு எப்போது?

'பசங்க' பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு-நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர்...

'கத்துக்குட்டி' இயக்குநருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு விழா!

இயக்குனர் இரா.சரவணன் இயக்கிய 'கத்துக்குட்டி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தமிழ்நாடு விவசாயிகள்....