தமிழக முதல்வருக்கு கிடைத்த புதிய பதவி! பொதுமக்கள் வாழ்த்து

  • IndiaGlitz, [Friday,June 02 2017]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், ஆட்சியில் ஒரு வெற்றிடமும் ஏற்பட்டிருந்த நிலையில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்த சூழ்ச்சியால் ஓபிஎஸ் பதவியை இழந்ததும் முதல்வர் பதவி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தது.
எடப்பாடி பழனிச்சாமியின் அரசு ஒருசில வாரங்கள் கூட நீடிக்காது என்று அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் கூறிய நிலையில் வெற்றிகரமாக அவர் தனது ஆட்சியின் 100வது நாளை கடந்தார். கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராமல் கிடந்த மேட்டூர் அணை தூர்வாருதல் போன்ற நல்ல அம்சங்களும் எடப்பாடியாரின் ஆட்சியில் நடந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தாத்தா என்ற புதிய பதவியும் கிடைத்துள்ளது. ஆம், எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஆண்டு மிதுன் பெருந்துறையை சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்தார். திவ்யா கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமுற்ற நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாத்தாவாகியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர்களும், பொதுமக்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

இந்த வேகத்தை மக்களுக்கு உணவு அளிப்பதிலும் காட்டுங்கள்: அரவிந்தசாமி

கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதையும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் மத்திய அரசின் மாட்டிறைச்சி ...

இதையாவது தமிழகத்திற்கு செய்ய வேண்டும்: தமிழருவி மணியனிடம் கூறிய ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் வருகை குறித்து சூசகமாக...

சிம்பு படத்தை தூக்கி நிறுத்துமா வைரமுத்துவின் 'ரத்தம்'

சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு 95%...

இந்தியாவில் திடீர் நிலநடுக்கம். பொதுமக்கள் அச்சம்

இந்திய தலைநகர் டெல்லி அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பெரும் அச்சம்...

இசையுலகின் ஒரே ராஜா, அவர்தான் இளையராஜா:

இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே இசையை ரசித்து கொண்டிருந்த நிலையை மாற்றி முதல்முதலாக பாமரனையும் தலையாட்டும்...